ஆப்நகரம்

மேகதாட்டு அணை விவகாரம் : தமிழக அரசு நாளை மனு தாக்கல்!

மேகதாட்டு அணைக்கான வரைவுத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து, தமிழக அரசு நாளை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறது.

Samayam Tamil 29 Nov 2018, 11:29 am
மேகதாட்டு அணைக்கான வரைவுத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து, தமிழக அரசு நாளை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறது.
Samayam Tamil Chunchi-Falls


பெங்களூர் மக்களின் குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தோடு காவிரியின் குறுக்கே, மேகதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது.

ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்று தண்ணீர் வழங்காத கர்நாடக அரசு, புதிதாக அணையும் கட்டிக்கொண்டால், தமிழகத்திற்கு தண்ணீர்கிடைக்காது என்ற வாதம் தமிழக அரசால் முன்வைக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் எதிர்ப்பைபொருட்படுத்தாத கர்நாடக அரசு, மேகதாட்டு அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் திட்ட பணிகள் உள்ளிட்ட தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்திருந்தது. இந்த வரைவு அறிக்கைக்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.

இதைத்தொடர்ந்து மேகதாட்டுஅணை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதினார்.

இந்நிலையில், மேகதாட்டுஅணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நாளை மனு தாக்கல் செய்யவுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்ய தயாரிக்கப்பட்டுள்ள மனுவிற்கு தமிழக அரசின் சட்டத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அடுத்த செய்தி