ஆப்நகரம்

மேலவளவு குற்றவாளிகளின் விடுதலை வழக்கு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மேலவளவு கொலை வழக்கில் விடுதலையான குற்றவாளிகளுக்கு பிறப்பித்த இடைக்கால உத்தரவுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக தெரிவித்து வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்தி வைத்தது

Samayam Tamil 18 Feb 2020, 7:55 pm
மதுரை: மேலவளவு கொலை வழக்கில் விடுதலையான குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை உயர் நீதிமன்ற மதுரை கிளை விலக்கிக் கொண்டுள்ளது.
Samayam Tamil உயர் நீதிமன்ற கிளை
உயர் நீதிமன்ற கிளை


மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட 7 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் 13 பேர், எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

மாநிலத்தை உலுக்கிய கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தண்டனை காலம் முடிவதற்குள் விடுதலை செய்த தமிழக அரசின் உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, வழக்கு முடியும் வரை 13 பேரும் ஊருக்குள் நுழையக்கூடாது எனவும், வேலூரில் தங்கி இருக்க வேண்டும் எனவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

சட்டப்பேரவை முற்றுகைக்கு உயர் நீதிமன்றம் தடை... தமிழக உள்துறை பதிலளிக்க உத்தரவு

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தொடர்ச்சியாக ஆஜராகாதது வருத்தமளிப்பதாக தெரிவித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு, ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக தெரிவித்து வழக்கு விசாரணையை வருகிற மார்ச் மாதம் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

அடுத்த செய்தி