ஆப்நகரம்

தமிழகத்திலிருந்து வடக்கிழக்கு பருவமழை விடைபெற்றது: சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழகத்திலிருந்து வடக்கிழக்கு பருவமழை விடைபெற்றுவிட்டதாகவும், கடந்தாண்டு மழைப்பொழிவு குறைந்தளவே பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 3 Jan 2019, 12:52 am
வடக்கிழக்கு பருவமழை விடைப்பெற்றுவிட்ட நிலையில் இந்தாண்டு குறைந்தளவே மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
Samayam Tamil 2018ல் தமிழகத்தில் குறைவான மழைப் பொழிவு: வானிமை ஆய்வு மையம்


இதுதொடர்பாக செய்தியாளரை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகம் மற்றும் தெற்கு ஆந்திராவில் கடந்த ஜனவரி 2ம் தேதியுடன் வடக்கிழக்கு பருவமழை முடிவடைந்தாக தெரிவித்தார்.

தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் கிடைக்க வேண்டிய 44 செ.மீ மழை அளவுக்கு பதிலாக 34 செ.மீட்டரில் மட்டுமே மழை பதிவாகியுள்ளதாக புவியரசன் இந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அடுத்த செய்தி