ஆப்நகரம்

தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

Samayam Tamil 8 May 2019, 4:27 pm
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.
Samayam Tamil Rain


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் இன்று செய்தியாளா்களிடம் பேசுகையில், அடுத்த 24 மணி நெரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அனல் காற்று சற்று குறையும்.

வெப்பநிலையை பொருத்த வரை வேலூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, கரூா், திண்டுக்கல், மதுரை, திருவள்ளூா், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து அனல் காற்று வீசி வந்தது.

இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மழை காரணமாக தற்போது வீசி வரும் அனல் காற்று சற்று குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருக்கோவிலூா் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அதிகபட்ச வெப்ப நிலையாக சென்னையில் 40 டிகிரி செல்சியஸ் மழை பதிவாகி உள்ளது.

அடுத்த செய்தி