ஆப்நகரம்

மழை ரமணன் வருகிற 31ம் தேதி ஓய்வு

மழை என்றாலே பல பேருக்கு ரமணன் பெயர் தான் மனதில் தோன்றும்.

TNN 29 Mar 2016, 9:04 pm
சென்னை: மழை என்றாலே பல பேருக்கு ரமணன் பெயர் தான் மனதில் தோன்றும்.
Samayam Tamil meterological department ramanan weather forecast
மழை ரமணன் வருகிற 31ம் தேதி ஓய்வு


மத்திய ,மாநில அரசு அதிகாரிகள் , ஊழியர்கள் மக்கள் மத்தியில் பெரிதாக பிரபலம் ஆவது கிடையாது. ஆனால் வாணிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் அதற்கு விதிவிலக்கு. ஒரு காலத்தில் மழை பெய்தால் போதும்,பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ரமணன் தொலைக்காட்சியில் தோன்றுவாறா என்று ஆர்வத்துடன் இருப்பார்கள்.

ரமணன் பேச்சுகளில் பிரபலமடைந்த சில வார்த்தைகள்:
”தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைபெய்யக்கூடும், கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.”

ரமணன் சென்னையில் படித்து வளர்ந்தவர். இளங்கலை இயற்பியலை விவேகானந்தா கல்லூரியில் படித்து, பின்னர் அண்ணா பல்கலையில் முதுகலை இயற்பியலை படித்தார். அதன்பின் வேலைபார்த்துக் கொண்டே சென்னை பல்கலையில் பி.எச்.டி முடித்தார். அப்படியே படி படியாக முன்னேறி , பல தேர்வுகளை எழுதி வாணிலை ஆய்வு மைய இயக்குநர் பதவியில் இருந்து , தற்போது வருகிற 31ம் தேதியன்று ஓய்வு பெறுகிறார்.

அடுத்த செய்தி