ஆப்நகரம்

தொழில்நுட்ப கோளாறால் வண்ணாரப்பேட்டை - விமான நிலைய மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Feb 2019, 1:30 pm
திருப்பூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வண்ணாரப்பேட்டை - டிஎம்எஸ் இடையிலான 10 கி.மீ தூர மெட்ரோ ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
Samayam Tamil Chennai Metro


இதனால் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல்கட்டம் முழுமையாக தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளுக்கு சிறப்பு சலுகை அறிவித்தது.

அதன்படி, சென்னை மெட்ரோ ரயிலின் அனைத்து வழித்தடங்களிலும் நேற்றும், இன்றும் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம். இது பயணிகளின் வருகையை அதிகரிக்கச் செய்யும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சைதாப்பேட்டை மெட்ரோ நிலையம் அருகே மேற்புற உபகரணத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைச் சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விரைவில் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு, ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி