ஆப்நகரம்

17 பேர் பலி விவகாரம் - தீண்டாமை சுவர் அமைத்த வீட்டின் உரிமையாளர் கைது..!

மேட்டுப்பாளையத்தில் 17 பேரை பலி வாங்கிய சுற்று சுவர் வீட்டின் உரிமையாளரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Samayam Tamil 3 Dec 2019, 2:24 pm
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் கிராமத்தில் நேற்று 20 அடிக்கு கட்டப்பட்டிருந்த சுற்று சுவர் இடிந்து பக்கத்துக்கு குடியிருப்பில் விழுந்ததில் 17 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.
Samayam Tamil 17 பேர் பலி விவகாரம் - தீண்டாமை சுவர் அமைத்த வீட்டின் உரிமையாளர் கைது..!


சம்பவ இடத்திற்கு விரைந்த தீ அணைப்பு வீரர்கள் பொக்லைன் உதவியுடன் நீண்ட நேரத்திற்கு பிறகு அனைவரது சடலத்தையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேட்டுப்பாளையம் ‘தீண்டாமை’ சுவர்: ஸ்டாலின் வைத்த கோரிக்கை!

அங்கு 17 பேர் உடல்களும் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் சுற்று சுவரை கட்டிய அந்த வீட்டு உரிமையாளர் சிவசுப்ரமணியம் என்பவரை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்திய உறவினர்களும், ஊர் மக்களும் உடல்களை வாங்க மறுத்தனர்.

அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் ராஜாமணி மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பேச்சுவர்த்தை நடத்திய பிறகு உடல்களை பெற்று கொண்ட உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த மதுரை இளைஞருக்கு ஸ்டாலின் பாராட்டு...

இதையடுத்து தாழ்வான பகுதியில் பில்லர் ஏதும் அமைக்காமல் உறுதியற்ற சுவரை கட்டிய சிவசுப்பிரமணியத்தை போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். தீண்டாமை காரணமாக கருங்கல்லினால் அபாயகரமான சுவரை கட்டிய புகார்களின் அடிப்படையில் சிறுமுகை பகுதியில் வைத்து தனிப்படை போலீசார் அவரை விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி