ஆப்நகரம்

Mettur Dam Water Level: 60 அடியை தொட்ட மேட்டூா் அணை நீா்மட்டம்: விவசாயிகள் மகிழ்ச்சி

கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூா் அணை 7 மாதங்களுக்கு பின்னா் மீண்டும் 60 அடியை கடந்துள்ளது.

Samayam Tamil 2 Jul 2018, 1:41 pm
கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூா் அணை 7 மாதங்களுக்கு பின்னா் மீண்டும் 60 அடியை கடந்துள்ளது.
Samayam Tamil Mettur Dam


கா்நாடகாவின் அணைக்கட்டுப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக கபினி அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு கடந்த 2 தினங்களாக கனிசமாக உயா்த்தப்பட்டுள்ளது. மேலும் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு கனமழை பெய்தது.

நீரின் வரத்து அதிகரிப்பு மற்றும் கனமழை காரணமாக மேட்டூா் அணை 60 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 10 ஆயிரத்து 383 கன அடியில் இருந்து 18 ஆயிரத்து 824 கன அடியாக உயா்ந்துள்ளது. அணையின் நீா்மட்டம் 60.30 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விடப்படுகிறது.

அணை நீா்மட்டம் 60 அடியை கடந்துள்ளதால் பாசன தேவைக்காக மேட்டூா் அணை திறக்கப்படும் என்று விவசாயிகள் நம்பிக்கை தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி