ஆப்நகரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் இரண்டரை அடி உயர்வு!

கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கு திறக்கப்படும், உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில், இரண்டரை அடி உயர்ந்துள்ளது.

Samayam Tamil 24 Jun 2018, 11:18 am
கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கு திறக்கப்படும், உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில், இரண்டரை அடி உயர்ந்துள்ளது.
Samayam Tamil met
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் இரண்டரை அடி உயர்வு!


கபினி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பதால், அணையின் பாதுகாப்புக் கருதி காவிரியில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவை கர்நாடக அரசு உயர்த்தியுள்ளது. நேற்று மாலை நேர நிலவரப்படி வினாடிக்கு 17 ஆயிரம் கன அடி நீர்வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை அணையின் நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரத்து 428 கன அடியாக அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் இரண்டரை அடி உயர்ந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி மட்டுமே நீர் திறக்கப்படுவதால், அணை நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே, கபினி அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால், காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவையும் வினாடிக்கு 6 ஆயிரத்து 667 கன அடியாக கர்நாடகா குறைத்துள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி