ஆப்நகரம்

மழையும் பெய்யுது; அணை நீரும் உயருது; நிம்மதிப் பெருமூச்சில் தமிழகம்...!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

TNN 12 Aug 2017, 8:45 am
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Samayam Tamil mettur dam water level increases
மழையும் பெய்யுது; அணை நீரும் உயருது; நிம்மதிப் பெருமூச்சில் தமிழகம்...!


தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் குடிநீர் தேவை ஓரளவு சரியாகி கொண்டிருக்கிறது. இதேபோல் கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அணைகளில் இருந்து அதிக அளவு நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. அணையின் நீர்வர்த்து 7,249 கன அடியிலிருந்து 8,150 கன அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 41.04 அடியாகவும், நீர் இருப்பு 12.63 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 7,000 கன அடியாக உள்ளது.

Mettur Dam water level increases.

அடுத்த செய்தி