சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி வரை உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர், கே.ஆர்.பி அணைகள் நிரம்பின. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி, தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக, ஒகேனக்கல் வந்து சேர்ந்தது. இதனால் அங்குள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
மேட்டூர் அணை நிலவரம்:
காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து 19,000 கன அடியில் இருந்து 32,421 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி வரை உயர்ந்தது.
இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 45.05 அடியாகவும், நீர் இருப்பு 14.83 டி.எம்.சியாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை குறைந்துள்ளது. இதனால் அணைகளில் நீர் இருப்பு குறைந்ததை அடுத்து, நீர் திறப்பின் அளவு குறைக்கப்பட்டது. அதன்படி, காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு 30,000 கன அடியில் இருந்து, 23,000 கன அடியாக குறைந்தது.
Mettur Dam water level increases 5 feet in a single day.
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர், கே.ஆர்.பி அணைகள் நிரம்பின. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி, தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக, ஒகேனக்கல் வந்து சேர்ந்தது. இதனால் அங்குள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
மேட்டூர் அணை நிலவரம்:
காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து 19,000 கன அடியில் இருந்து 32,421 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி வரை உயர்ந்தது.
இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 45.05 அடியாகவும், நீர் இருப்பு 14.83 டி.எம்.சியாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை குறைந்துள்ளது. இதனால் அணைகளில் நீர் இருப்பு குறைந்ததை அடுத்து, நீர் திறப்பின் அளவு குறைக்கப்பட்டது. அதன்படி, காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு 30,000 கன அடியில் இருந்து, 23,000 கன அடியாக குறைந்தது.
Mettur Dam water level increases 5 feet in a single day.