ஆப்நகரம்

Mettur Dam: 80 அடியை எட்டிய மேட்டூர் அணை!

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டியுள்ளது.

Samayam Tamil 17 Jul 2018, 9:44 am
மேட்டூர்அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டியுள்ளது.
Samayam Tamil Mettur Dam


கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையால் காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள, ஹாரங்கி, ஹேமாவதி,கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. கபினி ஆறு உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதிகளில் தொடந்து மழை பெய்து வருவதால் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிற‌து.

நேற்றைய நிலவரப்படி, கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர் மட்டம் 120.20 அடியாக உயர்ந்திருக்கிறது. இன்னும் இரு தினங்களில் கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் ஹாரங்கி, ஹேமாவதி, கபினி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளலவை எட்டும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்த 4 அணைகளில் இருந்து மைசூரு, மாண்டியா மாவட்ட விவசாயிகளுக்கு போக, வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் தமிழகத்துக்கு திறந்து விடப்படுகிறது.

மேலும் இன்று காலைநிலவரப்படிமேட்டூர் அணைக்குவரும் நீரின் அளவு60 ஆயிர கனஅடியை எட்டியதால்,அணையின் நீர் மட்டம் 80 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 41.41 டிஎம்சி.,யாகவும், அணையில் இருந்து குடிநீருக்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு 1000 கனஅடியாகவும் உள்ளது.

கர்நாடகாவின் கபினி அணியிலிருந்து காவிரிக்கு திறக்கப்படும் நீர் அளவு 50,000 ஆக உள்ளது . கேஆர்எஸ் அணையும் நிரம்பும் நிலையில் உள்ளதால் தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அடுத்த செய்தி