ஆப்நகரம்

நிரம்பி வழியும் மேட்டூர் அணை..தத்தளிக்கும் கிராமங்கள்..போக்குவரத்து பாதிப்பு!

மேட்டூர் அணை தொடர்ந்து இரண்டாவது முறையாக நிரம்பியுள்ள நிலையில், சுற்றுப்புற பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Aug 2018, 10:39 am
மேட்டூர் அணை தொடர்ந்து இரண்டாவது முறையாக நிரம்பியுள்ள நிலையில், சுற்றுப்புற பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil mettur dam water level today
நிரம்பி வழியும் மேட்டூர் அணை..தத்தளிக்கும் கிராமங்கள்..போக்குவரத்து பாதிப்பு!


தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகா மாநிலங்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை 4 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 23-ம் தேதி நிரம்பியது. இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர் இருப்பு சற்று குறைந்தது.

இதனிடையே கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தற்போது பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதால் கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்து உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அணைக்கு வரும் ஒரு லட்சத்து 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூரைச் சுற்றியுள்ள பகுதிகளில், ஆற்றுநீர் சாலைகளில் புகுந்துள்ளது. இதனால் பொறையூர், ரெட்டியூர், கோலநாயக்கன்பட்டி, தெற்கித்திகாடு, பூலாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அப்பகுதியில் பொதுமக்கள் சாலையைக் கடக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி