ஆப்நகரம்

சேலத்தில் வெள்ளப்பெருக்கு அபாயம்; மேட்டூர் - எடப்பாடி சாலை துண்டிப்பு!

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 17 Aug 2018, 7:44 am
சேலம்: காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Mettur Edappadi road


கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து அணைகளின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கபினி அணையில் இருந்து 55,000 கன அடி நீரும், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 1.20 லட்சம் கன அடி நீரும் திறக்கப்பட்டது. இதனால் காவிரியில் 1.75 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.70 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் மேட்டூர் அணை 2வது முறையாக நிரம்பி, நீர்வரத்துக்கு இணையாக நீர் திறக்கப்பட்டது.

இதன் காரணமாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதிகப்படியான நீர் வெளியேற்றத்தால், மேட்டூர் - எடப்பாடி சாலை 3வது நாளாக துண்டிக்கப்பட்டுள்ளது.

Mettur - Edappadi main road blocked for floods.

அடுத்த செய்தி