ஆப்நகரம்

AIADMK: அதிமுகவுடன் இணைந்த ஜெ.தீபா பேரவை- இப்படியொரு முடிவெடுக்க என்ன காரணம்? தீபா பேட்டி!

தனது பேரவையை அதிமுகவுடன் இணைத்துவிட்டதாகவும், தனக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Aug 2019, 5:03 pm
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின், ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பை அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா தொடங்கினார். இதையடுத்து தீபாவின் கணவர் மாதவன் தனிக் கட்சி தொடங்கி நடத்தி வந்தார்.
Samayam Tamil J Deepa


ஆனால் இரு கட்சிகளுக்கும் போதிய வரவேற்பு இல்லை. இதையடுத்து இரண்டும் ஒன்று சேர்ந்து செயல்படத் தொடங்கின. ஆனால் மக்களின் ஆதரவும் எதுவும் கிடைக்கவில்லை. அதேசமயம் தீவிர அரசியலில் இருந்து தீபா ஒதுங்கியே இருந்து வந்தார்.

Also Read: இது மேலயா அரசு அலுவலகம், ஐடி பார்க் கட்றது?- பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்த சூழலில் தான் அரசியலில் இருந்து விலகுவதாக கடந்த மாதம் தனது சமூக வலைத்தளப் பக்கம் மூலம் தீபா தெரிவித்திருந்தார். அதில் தனக்கு அரசியல் வேண்டாம். குடும்பம் தான் முக்கியம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து அதிமுகவில் இணைய விரும்புவதாக அக்கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர்கள் எப்போது எங்களை அழைக்கிறார்களோ, அப்போது அனைவரும் எந்தவித நிபந்தனையும் இன்றி இணைய இருக்கிறோம் என்று கூறினார்.

Also Read: அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் மக்களை தேடிச் செல்கின்றனர்- முதல்வர் பழனிச்சாமி பெருமிதம்!

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.தீபா, எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை அதிமுக உடன் இணைக்கப்பட்டு விட்டது. தனக்குப்பின் அதிமுக நிலைக்க வேண்டும் என்று ஜெயலலிதா விரும்பினார்.

அவரது எண்ணத்தை நிறைவேற்றவே அதிமுக உடன் இணைகிறோம். எனக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசியல் பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் முன்னாள் நிர்வாகிகள், தாய் கழகமான அதிமுகவில் இணையுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.

Also Read: முதலமைச்சருக்கு எதிராக இப்படியொரு திட்டமா! யார் அந்த முன்னாள் அமைச்சர்? ஏன் இந்த அடாவடி?

அடுத்த செய்தி