ஆப்நகரம்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனர்களை அகற்ற உத்தரவு

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்காக வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 30 Sep 2018, 12:14 pm
சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்காக வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil maxresdefault


சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனுமதி பெறாமலேயே வைக்கப்பட்ட பேனர்களை அகற்றக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட பேனர்கள் அனைத்தையும் அகற்ற உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மேலும், இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மற்றும் மாநகரக் காவல்துறை அக்டோபர் 8ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பேனர் வைக்க அனுமதி வழங்கும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விதிமுறைகள் மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி