ஆப்நகரம்

தமிழகத்தில் மின் இணைப்பு துண்டிக்கக் கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு!!

தமிழகத்தில் பொது முடக்கம் முடியும்வரை கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் மின் இணைப்பை துண்டிக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 5 May 2020, 12:26 pm
தமிழகத்தில் பொது முடக்கம் முடியும்வரை மக்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
Samayam Tamil மின் கட்டணம்


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் ஏப்ரல் 13ஆம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தது. அந்த அறிக்கையில், ''மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான இறுதி நாள் மாா்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை என்றும் தாழ்வழுத்த மின் பயனீட்டாளா்கள் பொது முடக்கம் அமல்படுத்தியதன் காரணமாக, தாமதக் கட்டணம் மற்றும் மின் துண்டிப்பு அல்லது மறு இணைப்புக் கட்டணமின்றி மே 6-ஆம் தேதி வரை செலுத்தலாம். மின்கட்டண கவுண்டா்களுக்கு வருவதைத் தவிா்க்கும் வகையில், பயனீட்டாளா்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்த வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மே 6ஆம் தேதிக்குள் மின் கட்டணம் செலுத்துவதற்கான இறுதிகெடுவை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஜூலை 31ஆம் தேதி வரை தாழ்வழுத்த மின் இணைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிடக்கோரியும் வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு அறக்கட்டளையின் நிறுவனரான வழக்கறிஞர் சி.ராஜசேகர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

கொரோனா: ஆவின் பால் பாதுகாப்பானதா? அமைச்சர் சொல்வதை கேளுங்க!

அவர் தனது மனுவில், ''வீட்டு மின் இணைப்பு பெற்றவர்கள், விவசாயிகள், சிறு குறு நிறுவனங்கள் ஆகியோர் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மே 6ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்துவது இயலாதது.

தாழ்வழுத்த மின் இணைப்பு பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானோர் வருமானம் இழந்துள்ளனர். தமிழக அரசும், மின்சார வாரியமும் இதை கருத்தில் கொண்டு ஜூலை 31-ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அறிவிக்க வேண்டும்.

மதுக்கடைகளை திறப்பது பேரழிவை ஏற்படுத்தும் முடிவு: ராமதாஸ் எச்சரிக்கை

மே 6க்குள் மின் கட்டணம் செலுத்தாத இணைப்பை துண்டிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும்'' என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினித்கோத்தாரி, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு காணொளி காட்சி மூலம் இன்று நடைபெற்றது.

ஆளுமை இல்லாத, அக்கறை இல்லாத அரசு: ஸ்டாலின் குற்றச்சாட்டு!

வழக்கை விசாரித்த நீதிபதிகள் மே 18 ம் வரை மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும், தாழ்வான மின் இணைப்புகளை துண்டிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளித்து அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி