ஆப்நகரம்

யானை தாக்கி ஆட்டோ டிரைவர் பலி!

கோவையில் யானை தாக்கி ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 25 Oct 2018, 9:24 am
கோவையில் யானை தாக்கி ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil death


கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் வலையம்பாளையத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகன் ரமேஷ்குமார்(35) ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை 1 மணியளவில், மனைவியின் சொந்த ஊரான விராலியூருக்கு சென்று கொண்டிருந்தார். வெள்ளருக்கான்பாளையம் குறுக்கு வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த போது, அவருக்கு எதிரில் காட்டு யானை வந்தது.ரமேஷை பார்த்த யானை தறிக்கெட்டு ஓடி வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த ரமேஷ், யானையின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றார். ஆனால், கோபத்தில் இருந்த யானை ரமேஷ் குமாரை தாக்கியது.

இதனிடையே யானையின் பிளிறல் சத்தத்தைக் கேட்ட வேட்டை தடுப்பு பாதுகாவலர்கள், யானையை விரட்டி, படுகாயமடைந்த சின்னசாமியை மீட்டனர். பின்னர், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே ரமேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். யானை தாக்கி ஆட்டோ டிரைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி