ஆப்நகரம்

திருப்பதியைப்போல மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் புதிய ஏற்பாடு தொடக்கம்

மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் முன்பை விட அதிகமாக காணப்படுவதால் சாமி தரிசனத்திற்காக 1 முதல் 2 மணிநேரம் காக்க வேண்டியிருக்கிறது. அப்போது குழந்தைகளின் பசியை போக்க இலவசமாக பசும் பால் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 14 Jul 2018, 11:59 am
மதுரை : மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் முன்பை விட அதிகமாக காணப்படுவதால் சாமி தரிசனத்திற்காக 1 முதல் 2 மணிநேரம் காக்க வேண்டியிருக்கிறது. அப்போது குழந்தைகளின் பசியை போக்க இலவசமாக பசும் பால் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil meenakshi amman temple


திருப்பதியில் இலவச பால், உணவு :
ஆந்திராவில் உள்ள திருமலை திருப்பதியில் பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதால், பகதர்கள் காத்திருப்பதற்காக கூண்டுகளில் பல மணிநேரம் அடைக்கப்பட்டு ஒவ்வொரு கூண்டாக திறந்து விடப்பட்டு, சாமி தரிசனம் செய்ய அனுப்பபடுவர்.

அப்படி கூண்டுகளில் அடைக்கப்படும் போது, பக்தர்கர்களுக்கு உணவு, குழந்தைகளுக்கு பால் வழங்கப்பட்டு வருகின்றன.

மீனாட்சி அம்மன் கோயிலில் புது திட்டம்:
திருப்பதியில் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை என்றாலும், மீனாட்சி கோயிலில் பக்தர்கள் சில மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டியுள்ளதால், கை குழந்தைகளூடன் வரும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பசியால் அழும் குழந்தைகளுக்கு நடுவே பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவேண்டி இருப்பதால் தாய்மார்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதை தீர்க்கும் வகையில், தினமும் 20 லிட்டர் பால் குழந்தைகளுக்காக கொடுக்கப்படுகின்றது. தேவையென்றால் கூடுதலாக கொடுக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாய்மார்கள், தாய்ப்பால் கொடுக்க விரும்பினால் அருகிலேயே தாய்பால் புகட்டும் அறை அமைக்கப்பட்டுள்ளது.

எந்த விளம்பரமுமின்றி தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் பகதர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்த செய்தி