ஆப்நகரம்

புதுவையில் பால் விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்வு- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு!

புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் பாண்லே என்ற பாலின் விலை, ஒரு லிட்டர் 42 ரூபாயில் இருந்து 48 ரூபாயாக உயர்த்தப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

Samayam Tamil 29 Aug 2019, 3:26 pm
புதுச்சேரியில் பாண்லே பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை உயர்த்தி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
Samayam Tamil புதுவையில் பால் விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்வு- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு!
புதுவையில் பால் விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்வு- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு!


அண்மையில் தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, புதுச்சேரியில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்கள், பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தித்தர வலியுறுத்தி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே, புதுச்சேரியில் இன்று சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பால் விலை உயர்த்தப்படுவது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு பேசியதாவது;

நமது அண்டை மாநிலமான தமிழகத்தில் ஆவின் நிறுவனம் பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.28-ல் இருந்து ரூ.32 ஆக உயர்த்தியுள்ளது. இதை பின்பற்றி இங்கும் கொள்முதல் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முத்து விழா காணும் ’அய்யா’ ராமதாஸ்- வன்னியர் சங்கம் முதல் பாட்டாளி மக்கள் கட்சி வரை...!

அதன்படி, புதுச்சேரி அரசின் பாண்லே நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படும் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுகிறது.

அதாவது சமன்படுத்திய பால் லிட்டர் ரூபாய் 36-ல் இருந்து ரூபாய் 42ஆகவும், சிறப்பு சமன்படுத்திய பால் லிட்டருக்கு ரூபாய் 38-ல் இருந்து ரூபாய் 44ஆக உயர்த்தப்படுகிறது.

அதேபோல், நிலைப்படுத்திய பால் ரூபாய் 42-ல் இருந்து ரூபாய் 48 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இன்னொரு ரபேல் ஒப்பந்தம்! பிரான்ஸுடன் அஜித் தோவல் பேச்சு

மேலும் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாய் உயர்த்தி அதாவது ரூபாய் 30-ல் இருந்து ருபாய் 34 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் புதுவையில் உள்ள 100 கூட்டுறவு பால் சங்கங்களை சேர்ந்த 40 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவர். இந்த விலை உயர்வானது, நாளை முதல் அமுலுக்கு வரும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

பிரபலமான 2 பட்ஜெட் ரக ஸ்கூட்டர்களை கைவிடும் முடிவில் ஹோண்டா..!

அடுத்த செய்தி