ஆப்நகரம்

கொடுமை: சாலையில் பாலை ஊற்றி ஆவின் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம்!

ஆவின் நிர்வாகத்தை கண்டித்து சாலையில் பாலை ஊற்றி பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Samayam Tamil 24 Jul 2020, 5:52 pm
பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆவின். தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்நிறுவனம், தற்போதைக்கு நாள் ஒன்றுக்கு 40 லட்சம் லிட்டர் பாலை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கிறது. மேலும், நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டர் பால் இந்நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டு வரூகிறது.
Samayam Tamil போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்


இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் மேல் பள்ளிப்பட்டு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் சிறு குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலை ஆவின் நிர்வாகம் 40 சதவீதம் மட்டுமே வாங்கிக் கொண்டு 60 சதவீதத்தை திருப்பி கொடுத்து விடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதையடுத்து, பால் உற்பத்தியாளர்களிடம் பாலை வாங்க மறுக்கும் ஆவின் நிர்வாகத்தை கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சாலையில் பாலை ஊற்றி ஆவின் நிர்வாகத்துக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஈசியாக உடனடி கடன் பெறுவது எப்படி?

கொரோனா ஊரடங்கு காலத்தில் பலரும் வேலையின்றி, உணவின்றி தவிக்கும் நிலையில், சாலையில் பாலை ஊற்றி நடத்தப்பட்ட போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தனிமனித பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், விவசாயிகளிடம் இருந்து பாலை முழுமையாக வாங்க மறுப்பதாக கூறப்படும் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

முன்னதாக, கொரோனாவால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை நடமாடும் பால் வண்டி முகவர்களாக பயன்படுத்தவும், முகவர்களுக்கான வைப்பு தொகையை குறைத்தும் ஆவின் நிறுவனம் எடுத்த நடவடிக்கை பலரது பாராட்டுக்களையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி