ஆப்நகரம்

அமைச்சர் போல் பேசி அதிகாரிகளை பணிமாற்றம் செய்த மிமிக்ரி கலைஞர் கைது

தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி போல் மிமிக்ரி செய்து சேலம் அனல்மின் நிலைய அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்த மிமிக்ரி கலைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

TNN 30 Nov 2016, 11:15 am
சேலம்: தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி போல் மிமிக்ரி செய்து சேலம் அனல்மின் நிலைய அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்த மிமிக்ரி கலைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil mimicry artist mimics tn ministers voice to transfer officials
அமைச்சர் போல் பேசி அதிகாரிகளை பணிமாற்றம் செய்த மிமிக்ரி கலைஞர் கைது


கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சேலம் அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்த துணை என்ஜினியர் ஜெயகுமார் மின் உற்பத்தி பிரிவில் இருந்து நிலக்கரி பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி நேரடியாக தொலைப்பேசியில் உயர் அதிகாரிகளை தொடர்புக் கொண்டு பணி இடமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பணி இடமாற்றம் செய்யப்பட்ட ஒரே வாரத்தில் ஜெயகுமார், சரியாக வேலைபார்க்கவில்லை எனக் கூறி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த இடை நீக்கம் தொடர்பாக மின்துறை அமைச்சரை சந்திக்கும்படி உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியதையடுத்து, அமைச்சர் தங்கமணியை ஜெயகுமார் சந்தித்துள்ளார். அப்போது, அனல் மின் நிலையத்தில் யாரையும் பணி மாற்றம் செய்யக்கூறி தான் யாரிடமும் போனில் பேசவில்லை என்று கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து, தனது பெயரை பயன்படுத்தி நடந்த மோசடிக் குறித்து விசாரிக்கும்படி அனல் மின் நிலைய அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கமணி உத்தரவிட்டார். மேட்டூர் போலீசாரின் உதவியுடன் குற்றவாளியை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். மேலும், இந்த மோசடி மூலம் பலகோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும், இதுபோன்ற வேலைகளில் பெரிய கும்பல் ஈடுபட்டிருப்பதாகவும் போலீசார் விசாரணையை துவங்கினர்.

அப்போது என்ஜினியர் ஜெயக்குமாருக்கு வந்த போன் கால், மொபைல் எண் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் திண்டுக்கலைச் சேர்ந்த மிமிக்ரி கலைஞர் சவரி முத்து என்பவர் இது போன்று பல முறை அமைச்சர் பேசி இருப்பதையும், 28 அதிகாரிகளுக்கு பணி இடமாற்றம் வாங்கித் தந்ததையும் கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்தனர். எனினும், அனல் மின் நிலைய அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

A Dindigul-based mimicry artist was arrested late on Monday evening by the Mettur police in Salem district for mimicking the voice of Tamil Nadu electricity minister P Thangamani to transfer officials from one place to another in a Thermal power unit. Police suspect a larger group to be involved in the case.

அடுத்த செய்தி