ஆப்நகரம்

பொதுத் தேர்வு: மாணவர்களுக்கு அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

பொதுத் தேர்வில் நடத்தப்படாத பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படாது என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

Samayam Tamil 6 Apr 2022, 7:27 am
கொரோனா ஊரடங்கிற்குப் பின்னர் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு தற்போது மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். கடந்த இரு ஆண்டுகளாக பொதுத் தேர்வு நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு கட்டாயம் நடத்தப்படும் என ஆரம்பம் முதலே கூறிவந்த அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மாணவர்கள் மத்தியில் இது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
Samayam Tamil tn school exams


ஊரடங்கு காரணமாக முழு பாடங்களையும் நடத்த முடியாத சூழல் உள்ளது. குறைவான நாள்களில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இதற்கிடையே திருப்புதல் தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடத்தி முடிக்காத பாடங்களிலிருந்து கேள்வி கேட்டால் என்ன செய்வது என மாணவர்கள் புலம்பி வந்தனர். ஆனால் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்களுக்கு நம்பிக்கை வார்த்தை அளித்தார்.
சித்திரை திருநாளில் பால் காய்ச்சும் சசிகலா? எடப்பாடி தரப்பு ஷாக்!
“பொதுத்தோ்வை எழுதவுள்ள மாணவா்களுக்கு இன்னும் சில பாடங்கள் நடத்தப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு நடத்தப்படாத பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்பது முறையானதாக இருக்காது. இதை கண்டிப்பாக கவனத்தில் கொள்வோம்” என்று கூறினார்.

பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் இரண்டு நாள்களாக நடைபெற்றது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஒன்றிய அரசின் தேசியக் கல்விக்கொள்கையை ஆரம்பத்தில் இருந்தே எதிா்த்து வருகிறோம். அதன் தாக்கம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான், பிரத்யேகமாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படுகிறது. அதனால் தேசிய கல்வி கொள்கையைச் சாா்ந்து மாநிலத்துக்கான கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டிய தேவையில்லை. தமிழக அரசு அமைத்துள்ள கல்விக்கொள்கை வடிவமைப்புக் குழுவில் சிறந்த வல்லுநா்கள் இடம்பெற்றுள்ளனா். எனவே, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக சிறந்த மாநில கல்விக் கொள்கையை இந்தக்குழு உருவாக்கும்.
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு? அமைச்சர் அளித்த விளக்கம்!
தமிழகம் வளா்ச்சி அடைந்த மாநிலமாக உள்ளது. அவ்வாறு வளா்ச்சி அடைந்த நம்மிடம் தேசிய கல்விக் கொள்கையை புகுத்துவது தவறு. டெல்லியைப் போன்று நமது அரசுப்பள்ளிகளிலும் உள்கட்டமைப்பை மேம்படுத்தினால்தான் மக்களின் நம்பிக்கையை பெற முடியும். அங்கு 1,100 பள்ளிகள் மட்டுமே இருக்கிறது. தமிழகத்தில் 36 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது. தமிழகம் வரும் டெல்லி துணை முதல்வா்: அந்த வகையில் நமது பள்ளிகளை பாா்வையிட டெல்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ஏப்ரல் 3ஆவது வாரத்தில் தமிழகம் வருகிறாா். அவரிடம் கருத்துகள் கேட்டு அறியப்படும்” என்று கூறினார்.

அடுத்த செய்தி