ஆப்நகரம்

மாணவர்களுக்கு இலவச திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

பள்ளி மாணவர்களுக்கு 10 உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Jun 2022, 1:19 pm
2025ஆம் ஆண்டில் தமிழ்நாடு கல்வியில் இந்தியளவில் முக்கிய இடம் வகிக்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tn school girl students


மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அலுவலர்களுக்கான நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர், “தமிழ்நாட்டில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை வேகமாக செயல்படுத்த கல்வி அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மழலையரின் கல்வித் திறனை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது..
EXCLUSIVE: எடப்பாடி ஜெயித்தது எப்படி? ஓபிஎஸ் சறுக்கியது எங்கே? ராஜன் செல்லப்பா பேட்டி!
வரும் 2025ஆம் ஆண்டில் கல்வியில் தமிழ்நாடு இந்திய அளவில் முக்கிய இடத்தை வகிக்கும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பாடப் புத்தகங்கள் உட்பட 10 உபகரணங்கள் மாணவர்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும். அதற்கான கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக பொதுக்குழு 2022: பரபரப்பு காட்சிகள் அடங்கிய புகைப்படத் தொகுப்பு

அரசுப் பள்ளிகளில் சேதமடைந்த கட்டிடங்களில் மாணவர்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் சேதமடைந்த கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று அமைச்சர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி