ஆப்நகரம்

மாணவர் சேர்க்கை இந்த இடங்களில் கிடையாது: அமைச்சர் திட்டவட்டம்!

மாணவர் சேர்க்கை, பள்ளிகள் திறப்பு, புத்தகம் வழங்குதல் என பல்வேறு விஷயங்கள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியுள்ளார்.

Samayam Tamil 14 Jun 2021, 1:08 pm
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil anbil mahesh


சென்னை அசோக் நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
பள்ளிகள் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் நடத்தும் ஆலோசனை!
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் தளர்வுகள் அளிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. மீதமுள்ள 11 மாவட்டங்களில் தளர்வுகள் வழங்கியதும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

9ஆம் வகுப்பில் பெற்ற மதிபெண்கள் அடிப்படையில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தற்போதயை சூழலில் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களில் அனைவரும் தேர்ச்சி என குறிப்பிட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளியிலிருந்து அரசு பள்ளிக்கு வரும் மாணவர்களை தக்கவைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகல்வி துறையில் கடந்த காலத்தில் முறைகேடுகள் நடைபெற்று இருந்தால் உண்மை தன்மை குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். ஒரு வாரத்தில் மாணவர் சேர்க்கையை முடித்து பாட புத்தகங்கள் வழங்கப்படும். தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர் சேர்க்கையை நிறுத்துங்கள்: இதுல இவ்வளவு பிரச்சினையா?
ஆன்லைன் வகுப்புகள் குறித்த நடைமுறைகளை முதலமைச்சரிடம் ஒப்படைத்துள்ளோம். ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு விரைவில் வெளியிடும்.

தற்போதைய சூழலில் மாணவர் சேர்க்கை நடைபெற்றாலும் ஆன்லைன் வகுப்பு மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும், வாட்ஸ் அப் மூலமாகவும் வகுப்பு நடைபெறும். கொரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்த பின்னரே நேரடி வகுப்புகள் தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்படாது, வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதரம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி