ஆப்நகரம்

பயங்கர கார் விபத்து; தனி உதவியாளர் பலியானதால் அமைச்சர் விஜயபாஸ்கர் அதிர்ச்சி!

புளிய மரத்தின் மீது மோதி கார் பயங்கர விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 12 Jan 2020, 10:32 am
புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரை சேர்ந்த வெங்கடேசன்(31). இவர் கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக பணியாற்றி வந்தார்.
Samayam Tamil Sec Dead


அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவராகவும் இருந்துள்ளார். புதுக்கோட்டையில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய ஊராட்சி குழுதலைவர் உள்ளிட்ட பதவிகளில் வெற்றி பெற்ற அதிமுகவினருக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று வாழ்த்துக் கூறினார்.

முதலில் கருத்து,.. அப்புறம்தான் அதிசயம்... மவுனம் கலைத்த கார்த்தி சிதம்பரம் எம்பி.!

இதையடுத்து எம்.ஜி.ஆர், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு சென்னைக்கு புறப்பட்டார். இவரை திருச்சி விமான நிலையத்தில் விட்டுவிட்டு, வெங்கடேசன் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

இந்நிலையில் கிளிக்குடி வீரபெருமாள்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக கார் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளரான வெங்கடேசன், ஓட்டுநர் செல்வம்(38) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

விருதுநகர் டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு, வீடியோ உள்ளே!

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். உடனே இருவரின் உடல்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் வெங்கடேசனின் உடல் இலுப்பூர் அரசு மருத்துவமனையிலும், ஓட்டுநர் செல்வத்தின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியிலும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர்: தேர்தல் அலுவலருக்கு நெஞ்சு வலி!

சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பரம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெங்கடேசனின் தாயார் இந்திரா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி