ஆப்நகரம்

புதிய ரேஷன் அட்டை: அமைச்சர் சக்கரபாணி காட்டும் அதிரடி..!

ரேஷன் அட்டை வழங்குவதில் மோசடியில் ஈடுபட்ட இரண்டு அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல்

Samayam Tamil 1 Aug 2021, 10:36 pm
புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மே 10ம் தேதி முதல் விண்ணப்பித்த 3 லட்ச பயனாளிகளுக்கு புதிய ரேஷன் அட்டை வழங்கப்பட்டுவிட்டதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
Samayam Tamil file pic


இன்னும் 4 லட்ச விண்ணப்பதாரர்களுக்கு ரேஷன் அட்டை அச்சிடும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், புதிய ரேஷன் அட்டை வேண்டி விண்ணப்பவர்களிடம் மோசடி வழியில் அதிகாரிகள் செயல்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்தன.

ஏற்கனவே, கொரோனா நிவாரண பொருட்களை வாங்காமல் தவறியவர்களுக்கு ஜூலை 31 தேதிக்குள் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்ததை அடுத்து புதிய ரேஷன் அட்டைக்காக பலரும் விண்ணப்பிக்க தொடங்கினர்.

திருமாவுக்கு பிளாஸ்டிக் நாற்காலி, சர்ச்சையில் திமுக அமைச்சர்..!

இதனை ஆயுதமாக்கிக்கொண்ட அதிகாரிகள் உறவினர்கள், தெரிந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தும், மோசடி வழியில் செயல்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இந்நிலையில், புதிய குடும்ப அட்டை வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்ட வட்ட வழங்கல் அதிகாரிகள் 2 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும், முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அடுத்த செய்தி