ஆப்நகரம்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பற்றி அப்படியொரு பேச்சு; சிரிப்பலையில் மூழ்கிய மாணவர்கள்!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் பற்றி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிய பேச்சு மாணவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

Samayam Tamil 15 Jan 2020, 1:03 pm
தமிழக அரசு சார்பில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதனை பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைத்து வருகின்றனர்.
Samayam Tamil Dindigul Srinivasan


இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் விஜயலட்சுமி தலைமையில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ஜல்லிக்கட்டு நடக்கும் போது இப்படியொரு திடீர் உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்றம்!

நிகழ்ச்சியில் அவர் பேசிய போது, மாணவர்களை பார்த்து எம்.ஜி.ஆர் யாரென்று தெரியுமா? என்று கேட்டார். அதற்கு தெரியும் என்று மாணவர்கள் பதில் அளித்தனர். எப்படி என்று அமைச்சர் மீண்டும் கேட்டார். அதற்கு சினிமாவில் நடித்திருக்கிறார் அல்லவா.

அதன்மூலம் தெரியும் என்று கூறினர். அப்போது பேசிய அமைச்சர் சீனிவாசன், எம்.ஜி.ஆர் உங்களுக்கு தாத்தா. ஜெயலலிதா உங்களுக்கு பாட்டி. எங்களுக்கு அவர்கள் பெரியப்பா, பெரியம்மா என்று மாணவர்களிடம் தெரிவித்தார்.

வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினி; அப்புறமென்ன... ஒரே வாழ்த்து மழை தான் போங்க!

இந்த பேச்சை கேட்டு மாணவர்கள் சிரிப்பலையில் மூழ்கினர். இதனைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆரின் “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே” என்று பாடலை பாடினார். இதற்கும் அரங்கில் சிரிப்பலை எதிரொலித்தது.

தொடர்ந்து பேசிய அவர், இளைஞர்கள் நாள்தோறும் விளையாட வேண்டும். இதன்மூலம் உடலை உறுதியாகவும் மனதை புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க முடியும். புதிய விளையாட்டு வீரர்களை உருவாக்க இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இப்படியொரு பொங்கல் வாழ்த்தா?- எதிர்பார்க்கல மிஸ்டர் மோடி!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு ஊராட்சி மற்றும் பேரூராட்சியில் 15 முதல் 30 வயது வரையுள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக உறுப்பினராக சேர்க்கப்படுவர்.

இதன்மூலம் அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு ஏற்படுத்தப்படும். மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். இதில் வெற்றி பெறுவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவர் என்று கூறினார்.

அடுத்த செய்தி