ஆப்நகரம்

செருப்பை மாட்டிவிட அதிகாரியை அழைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!!!

சென்னையில் நடந்த இரத்ததான முகாமில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிகாரி ஒருவரை அழைத்து தனது செருப்பை மாட்டிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Samayam Tamil 29 Jun 2018, 6:31 pm
சென்னையில் நடந்த இரத்ததான முகாமில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிகாரி ஒருவரை அழைத்து தனது செருப்பை மாட்டிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
Samayam Tamil செருப்பை மாட்டிவிட அதிகாரியை அழைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!!!
செருப்பை மாட்டிவிட அதிகாரியை அழைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!!!


இரத்ததானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள காவலர்கள், இன்று சிறப்பு இரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருந்தனர். காவலர்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த இரத்ததான முகாமை, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார்.

இந்த விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பல அமைச்சர்களும் காவல்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செருப்பில் ஏதோ சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடனே அமைச்சர் அங்கிருந்த பிஆர்ஓவை அழைத்து, அதை சரிசெய்து அவரை வைத்து செருப்பை மாட்டிக்கொண்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக தளங்களில் வைரலாகி வருகிறது. அமைச்சரின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி