ஆப்நகரம்

நகைக்கடன் தள்ளுபடி: அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்!

கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 2 Dec 2021, 12:54 pm
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்ட நகைக்கடன்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் 95 சதவீதம் பணிகள் நிறைவு பெற்று விட்டது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tn jewelery loan


திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில் எப்போது நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆட்சிக்கு வந்த பின் கடன் விவரங்களை ஆய்வு செய்தபோதுதான் அதில் நடைபெற்ற பல்வேறு ஊழல்கள் குறித்து தெரியவந்தது.

நகைக்கடன் தள்ளுபடி ஆகிவிடும் என்ற எண்ணத்தில் தமிழகம் முழுக்க பல்வேறு ஊர்களில் ஒரே நபர் எண்ணற்ற வங்கிகளில் கடன் பெற்றிருப்பதும் அதற்கு பல வங்கி ஊழியர்கள் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பல சம்பவங்கள் இது போல் நடைபெற்றுள்ளன.
ஸ்டாலின் கொடுத்த பிரஷர்: இது தான் அந்த சீக்ரெட்!
எனவே இது குறித்து ஆய்வு செய்து தகுதி வாய்ந்தவர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதனால் நகைக் கடன் பெற்றவர்களின் விவரங்கள் வங்கிகளால் சேகரிக்கப்பட்டு வந்தன. இதனால் எப்போது கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மொத்த நகைக்கடன் 85 ஆயிரம் கோடி என்று கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
திமுகவில் இணைவது எப்போது? அன்வர் ராஜா நடத்தும் ஆலோசனை!
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர், “கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்ட நகைக்கடன்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் 95% பணிகள் முடிவடைந்து விட்டது. மேலும் விவசாயிகளுக்கு வரும் ஜூன் மாதத்துக்குள் 2,500 ரூபாய் கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.700 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 75 கூட்டுறவு மலிவு விலை மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளது” என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி