ஆப்நகரம்

நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு: அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!

கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை வெளியிடப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

Samayam Tamil 22 Oct 2021, 3:30 pm
திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவற்றில் முக்கியமானது கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு. ஐந்து சவரனுக்கு கீழ் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்ற அனைவரது கடனும் தள்ளுபடி செய்யப்படும் என ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தார்.
Samayam Tamil tn gold loan waiver


திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில் எப்போது நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆட்சிக்கு வந்த பின் கடன் விவரங்களை ஆய்வு செய்தபோதுதான் அதில் நடைபெற்ற பல்வேறு ஊழல்கள் குறித்து தெரியவந்தது.

நகைக்கடன் தள்ளுபடி ஆகிவிடும் என்ற எண்ணத்தில் தமிழகம் முழுக்க பல்வேறு ஊர்களில் ஒரே நபர் எண்ணற்ற வங்கிகளில் கடன் பெற்றிருப்பதும் அதற்கு பல வங்கி ஊழியர்கள் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பல சம்பவங்கள் இது போல் நடைபெற்றுள்ளன.

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: கோட்டையில் என்ன நடக்கிறது?

எனவே இது குறித்து ஆய்வு செய்து தகுதி வாய்ந்தவர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதனால் நகைக் கடன் பெற்றவர்களின் விவரங்கள் வங்கிகளால் சேகரிக்கப்பட்டு வந்தன. இதனால் எப்போது கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்த சூழலில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அதிகாரி!
சென்னையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை வெளியிடப்படும். நகைக்கடன் தள்ளுபடியால் சுமார் 11 லட்சம் பேர் பயனடைவார்கள். 15 கூட்டுறவு சங்கங்களில் சுமார் 12 கோடி முறைகேடு நடந்துள்ளது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என அமைச்சர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி