ஆப்நகரம்

கமல் தனியொருவனா ? கூட்டத்தில் ஒருவனா ? ஜெயகுமாருக்கு சந்தேகம்

நடிகர் கமல் ஆயிரத்தில் ஒருவனா, கூட்டத்தில் ஒருவனா, தனியொருவான என்று மக்கள் தீர்மானிப்பார்கள் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

Samayam Tamil 4 Jun 2018, 2:21 pm
நடிகர் கமல் ஆயிரத்தில் ஒருவனா, கூட்டத்தில் ஒருவனா, தனியொருவான என்று மக்கள் தீர்மானிப்பார்கள் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
Samayam Tamil saljcbnlajns


தூத்துக்குடி விவகாரத்தில் சட்டப்பேரவை கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து திமுக, மீண்டும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என தோழமை கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, இன்று முதல் திமுக உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், முறுக்கிக்கொண்டு போன மாப்பிள்ளை தற்போது மீண்டும் பேரவைக்கு வருகை தந்துள்ளார். அவர்களாகவே போனார்கள், தற்போது அவர்களாகவே வந்தார்கள்.

4 நாட்கள் பேரவை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல், தற்போது ஜனநாயக கடமையாற்ற வரும் திமுகவை வரவேற்கிறோம். ஆனால் திமுகவினர் 4 நாட்கள் நேரத்தை வீணடித்துவிட்டனர்.

மேலும் நடிகர் கமல் ஆயிரத்தில் ஒருவனா, கூட்டத்தில் ஒருவனா அல்லது தனி ஒருவனா என்று மக்கள் தீர்மானிப்பார்கள். ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றி வருகிறார் டிடிவி தினகரன். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அடுத்த செய்தி