ஆப்நகரம்

கொள்ளையடித்த பணத்தை வைத்து ஆர். கே . நகர் தேர்தலில் தினகரன் வெற்றி: அமைச்சர் ஜெயகுமார் ஆவேசம் !

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது தொடர்பாக அறிவிப்பை 31 தேதி வெளியிடப்போவதாக கூறியதை தொடர்ந்து அதிமுக அமைச்சர் ஜெயகுமார் கருத்து கூறியுள்ளார்.

TNN 26 Dec 2017, 11:51 am
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது தொடர்பாக அறிவிப்பை 31 தேதி வெளியிடப்போவதாக கூறியதை தொடர்ந்து அதிமுக அமைச்சர் ஜெயகுமார் கருத்து கூறியுள்ளார்.
Samayam Tamil minister jayakumar about ttv dinakaran and dmk stalin
கொள்ளையடித்த பணத்தை வைத்து ஆர். கே . நகர் தேர்தலில் தினகரன் வெற்றி: அமைச்சர் ஜெயகுமார் ஆவேசம் !


நடிகர் ரஜினி இன்று (அதாவது 26 தேதி ) முதல் 31 தேதிவரை தனது ரசிகரக்ளை சந்திக்க உள்ளார். இந்த நிகழ்வின் முதல் நாளான இன்று ரஜினி’ போர் என்றால் தேர்தல் , அதனால் தேர்தல் வரட்டும் பார்த்துகொள்ளலாம்’ என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அதிமுக அமைச்சர் ஜெயகுமார் கூறியிருப்பதாவது ‘ வாழ்கையே ஒரு போராட்டம்தான் . அரசியலும் அப்படித்தான் . யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

மக்கள்தான் அதற்கான முடிவை சொல்லவேண்டும் . யார் நினைத்தாலும் அதிமுகவின் ஒரு செங்கலை கூட அசைக்க முடியாது. கொள்ளையடித்த பணத்தை வைத்து ஆர். கே . நகர் வெற்றியை தினகரன் கொள்ளையடித்துள்ளார். திமுகவும் , தினகரனும் சேர்ந்து இப்படி சதி செய்ததால்தான் திமுகவிற்கு தேர்தலில் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி