ஆப்நகரம்

மாடி மேல இருந்து கமல் பார்க்கிறார்: அமைச்சர் ஜெயகுமார்

மாடி மேல் இருந்து கொண்டு பார்க்கும் கமல் போன்றவர்களுக்கு மக்கள் பிரச்னை புரியாது என்று அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 6 Jan 2018, 12:54 pm
மாடி மேல் இருந்து கொண்டு பார்க்கும் கமல் போன்றவர்களுக்கு மக்கள் பிரச்னை புரியாது என்று அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.
Samayam Tamil minister jayakumar commented on actor kamal hassan twitter
மாடி மேல இருந்து கமல் பார்க்கிறார்: அமைச்சர் ஜெயகுமார்


போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழக அரசுக்கு நடிகர் கமல் டுவிட்டர் மூலம் கோரிக்கை வைத்திருந்தார்.

அதில், தமிழக முதலமைச்சர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு, தயவாய் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பொங்கலுக்கு அதுவே அரசுதரும் விலைமதிப்பிலா பரிசாகும்.
என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில், பொங்கல் இலவச வேட்டி, சேலை திட்டத்தை அமைச்சர் ஜெயக்குமார் துவங்கி வைத்து வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசுக்கு நிதிநெருக்கடி இருக்கும் போதிலும், ஜெயலலிதா கொண்டு வந்த இலவச வேட்டி சேலை திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று கூறினார்.

மேலும், நடிகர் கமல்ஹாசனை விமர்சித்த ஜெயகுமார், மாடி மேல் இருந்து பார்க்கும் கமல்ஹாசனால் மக்கள் படும் கஷ்டத்தை உணர முடியாது என்றும், நாங்கள் மக்களை நேரில் சந்தித்து பேசுவதால், எங்களுக்கு அவர்களது வலி புரியும் என்றும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி