ஆப்நகரம்

தமிழகத்தின் அமைதியை சீர்குலைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை!!

''தமிழகத்தின் அமைதியை சீர்குலைப்பவர்கள் ராஜா வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

Samayam Tamil 7 Mar 2018, 2:55 pm
''தமிழகத்தின் அமைதியை சீர்குலைப்பவர்கள் ராஜா வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
Samayam Tamil minister jayakumar condemns h raja opinion about periyar
தமிழகத்தின் அமைதியை சீர்குலைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை!!


''திரிபுரா மாநிலத்தில் எப்படி தலைவர் லெனின் சிலை உடைக்கப்பட்டதோ, அதேபோல் தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும்'' என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் இந்தப் பதிவை நீக்கிவிட்டார்.

இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எச். ராஜாவின் பேஸ்புக் பதிவுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளர்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ''பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற எச்.ராஜாவின் கருத்தை ஏற்க முடியாது. எச். ராஜா கருத்துக்கு அதிமுக சார்பில் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.மேலும் தமிழகம் பெரியார் மண். இது புரட்சித் தலைவர் மண். எனவே அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் யாரும் கலவரத்தை தூண்ட முயற்சிக்கக்கூடாது.

தமிழகத்தின் அமைதியை சீர்குலைப்பவர்கள் ராஜா வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் சரி அல்லது அரசியல் தலைவராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

அமைதி பூக்காவாக இருக்கும் தமிழகத்தில் விஷ விதைகளை தூவி ஆதாயம் தேட வேண்டாம்'' என்றார்.

அடுத்த செய்தி