ஆப்நகரம்

ராயபுரம் பரபரப்பு..! மீண்டும் ஊரடங்கா? - ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை

ராயபுரத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் மண்டல அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

Samayam Tamil 11 Jun 2020, 2:12 pm
சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பால் 4,207 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இங்கு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் மாநகராட்சி சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அதன் விளைவாக, வீட்டிலிருந்து வெளியே வரும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணியவும், அடிக்கடி சோப்பு போட்டு கையை கழுவவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
Samayam Tamil file pic minister jayakumar


மேலும், மாதவரத்தில் செயல்பட்டு வரும் பழ கடை சந்தை வியாபாரிகள் முக கவசம் அனிந்து கொண்டு சமூக இடை வெளியுடன் வியாபாராத்தை மேற்கொள்ள எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ராயபுரம் மண்டலத்தில் கொரோனோ கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர் ஜெயகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம். நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராயபுரம் மண்டல அதிகாரிகள் பங்கேற்றனர்.

அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டவைகளை குறித்து கூட்டம் முடிவில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, ராயபுரம் மண்டலத்தில் கொரோனோவினால் 4,207 பாதிக்கப்பட்டுள்ளனர். ராயபுரம் மண்டலத்தில் ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம், துறைமுகம் என இரு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு ஒருநாளைக்கு 250 பரிசோதனைகள் மேற்கொள்கிறோம்.

ராயபுரம் குழந்தைகளுக்கு ஏன் இவ்வளவு கஷ்டம்? சுப்ரீம்கோர்ட் கிடுக்கிப்பிடி!

குடிசைப்பகுதிகளில் கொரொனோ தாக்கம் குறைந்து வருகிறது. சீரக குடிநீர் வீட்டிலேயே தயார் செய்யலாம். பச்சை மிளகு, உப்பு, மஞ்சள், சீரகம் ஆகியவற்றை காய்ச்சி வடிகட்டி 5 நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அதே போன்று புதினா குடிநீரும் குடிக்கலாம். புரதச்சத்து மிகுந்த கருப்பு உளுந்தங் கஞ்சி வாரம் 2 முறை சாப்பிட வேண்டும் என்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்கிறோம். முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்கக்கூடாது.

அம்மா உணவகம் மூலம் கபசுர குடிநீர் காய்ச்சி கொடுக்கப்படுகிறது. கிருமி நாசினி தெளிப்பு தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு கூறினாலும் அதனை நாம் கைவிடவில்லை.

தமிழகத்தில் சமூக பரவல் இல்லை என முதலமைச்சர் கூறியிருக்கிறார். தன்னிச்சையாக ஊரடங்கை அறிவிக்க முடியாது. மருத்துவ வல்லுனர் குழு அறிக்கையாக அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர், அமைச்சரவை கூடியே மீண்டும் ஊரடங்கா என்பது குறித்து முடிவு செய்ய முடியும் என கூறினார்.

அடுத்த செய்தி