ஆப்நகரம்

திமிருவாதத்தின் உச்சம் - குருமூர்த்தியை கண்டித்த அமைச்சர் ஜெயக்குமார்!

துக்ளக் பத்திரிகை விழாவில் பேசிய குருமூர்த்திக்கு நாவடக்கம் தேவை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Nov 2019, 9:21 am
துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராக இருக்கும் குருமூர்த்தி அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகனும் தேனி எம்.பியுமான ரவீந்திரநாத் குமாரையும் விமர்சித்து கார்டூன் ஒன்று துக்ளக் இதழில் பதிவிடப்பட்டது.
Samayam Tamil Jayakumar


இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை சீண்டும் வகையில் மீண்டும் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். திருச்சியில் துக்ளக் பத்திரிகையின் பொன்விழா சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

அரசு ஆவணங்களில் இருந்து 'திருநங்கை' என்ற வார்த்தை நீக்கம்? : கொதித்தெழுந்துள்ள மூன்றாம் பாலினத்தவர்!!

இதில் பங்கேற்று பேசிய அந்த பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி, இரண்டாக பிரிந்திருந்த அதிமுகவை இணைத்ததில் தனக்கு பங்குண்டு. எனது அறிவுறுத்தலின் பேரில் ஜெயலலிதா நினைவிடத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தியானத்தில் அமர்ந்தார்.

இதனைத் தொடர்ந்தே கட்சியில் இணைப்பு ஏற்பட்டது என்று கூறினார். இது அதிமுகவிற்குள் புயலை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

தொண்டர்களால் நாங்கள்; தொண்டர்களுக்காக நாங்கள் : இது ஓபிஎஸ் 'பஞ்ச்' !!

அப்போது, இது திமிருவாதத்தின் உச்சம். ஆணவத்தின் உச்சம். குருமூர்த்தி நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்றார். நடிகர் ரஜினிகாந்த் தான் தமிழகத்தில் அரசியல் மாற்று என குருமூர்த்தி பேசியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, கடந்த 15 நாட்களாக முதலமைச்சரும், நாங்களும் இதற்கு விளக்கம் அளித்து வருகிறோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் சினிமா துறையில் நட்சத்திரங்களாக ஜொலித்தனர்.

ரஜினியால் தான் அது சாத்தியம் : சத்தியம் செய்யாத குறையாக சொல்லும் துக்ளக் ஆசிரியர்!!

அரசியலிலும் பெரிய நட்சத்திரங்களாக ஜொலித்தார்கள். ஆனால் இவர்கள் அப்படி ஜொலிக்க மாட்டார்கள். கமல் கட்சி ஆரம்பித்து அவரது வாக்கு வங்கி என்னவென்று தெரிந்துவிட்டது. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கும் போது இதே நிலை தான் அவருக்கும் ஏற்படும் என்றார்.

அடுத்த செய்தி