ஆப்நகரம்

இசட் பிளஸ் பாதுகாப்பை மீறு எப்படி வெற்றிவேல் வீடியோ எடுத்தார்? அமைச்சர் ஜெயகுமார் கேள்வி

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோ உள்நோக்கத்தோடு எடுக்கப்பட்டது என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

TNN 20 Dec 2017, 1:18 pm
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோ உள்நோக்கத்தோடு எடுக்கப்பட்டது என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
Samayam Tamil minister jayakumar says that the jayalalitha treatment video is released with a motive
இசட் பிளஸ் பாதுகாப்பை மீறு எப்படி வெற்றிவேல் வீடியோ எடுத்தார்? அமைச்சர் ஜெயகுமார் கேள்வி


ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போன்ற ஓரு வீடியோவை டிடிவி தினகரன் அணியின் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார் . இது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ''நாங்கள் காவல் தெய்வமாக போற்றும் ஜெயலலிதா அவர்களின் வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டது தவறு . ஜெயலிலதாவின் மதிப்பை கெடுக்கவே இதுபோன்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமீஷனை தமிழக அரசு அமைத்திருக்கிறது. இந்த வீடியோ ஆதாரங்களை அங்கேதான் அவர்கள் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் சுயேச்சையாக வெற்றிவேல் வெளியிட்டது விசாரணை கமிஷனை அவமதிக்கும் செயல்.

ஜெயலலிதா அவர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அந்த பாதுகாப்பை மீறி எப்படி வெற்றிவேல் வீடியோ எடுத்திருக்க முடியும். பல முக்கிய கட்சித்தலைவர்கள் கூட ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லை எனவே இந்த வீடியோ அவர் எப்படி எடுத்திருப்பார். ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே சசிகலா குடும்பத்தால்தான் அவருக்கு அதிக பிரச்சனை ஏற்பட்டது. இப்போது அவர்களால்தான் பிரச்சனை ஏற்பட்டுள்ளது'' என்றார்.

அடுத்த செய்தி