ஆப்நகரம்

ஆடிக் காற்றும் அடிக்காது, அம்மிக் கல்லும் நகராது, ஜெ., ஆட்சியும் பறக்காது - அமைச்சர் ஜெயக்குமார்!

திமுக எம்.எல்.ஏவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதாவின் பெருமைகளை எடுத்துரைத்தார்.

Samayam Tamil 16 Jul 2019, 3:58 pm
கடந்த மாத இறுதியில் தொடங்கிய தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் காலை, மாலை என இருவேளைகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
Samayam Tamil Jayakumar


அதில் பேசிய திமுக எம்.எல்.ஏ பூங்கோதை, தமிழ்நாட்டில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே இனிப்பு பாக்ஸ் மீது எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறுவது அவசியம்.

உதாரணமாக, எவ்வளவு கலோரிகள், சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது உள்ளிட்ட விவரங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, சிகரெட் பாக்கெட்களில் எச்சரிக்கை படம் இருக்கிறது.

என்னுடைய நீக்கத்திற்கு பின்னணி இவங்க தான்; அதிர்ச்சி தகவல் வெளியிட்ட கராத்தே தியாகராஜன்!

அதேபோல் தின்பண்டங்களினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான படங்கள் இடம்பெறச் செய்வது பற்றி அரசு பரிசீலிக்கும். நீங்கள் கூறிய கருத்தை ஏற்கிறோம். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தபால் துறை தேர்வை ரத்து செய்ய வைத்து மாஸ் காட்டியுள்ள தமிழக எம்.பி.க்கள்!

பின்னர் பேசிய எம்.எல்.ஏ பூங்கோதை, நீட் தேர்வு நம்முடைய சமூக நீதிக்கு எதிராக உள்ளது. இதனால் தனியார் நிறுவனங்கள் தான் அதிக சம்பாதிக்கின்றன. ஆடிக் காற்றில் அம்மிக் கல் பறப்பது போல், ஜெயலலிதாவின் ஆட்சியும் பறந்து போய்விடும் என்றார்.

கால அவகாசம் கேட்கும் தேர்தல் ஆணையத்தை விளாசிய ஸ்டாலின்!

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அம்மிக் கல்லிற்கு பதிலாகத் தான் அப்போதே ஜெயலலிதா மிக்ஸி கொடுத்துவிட்டார். எப்போதும் ஜெயலலிதா ஆட்சி தான் என்றார்.

இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ஆடிக் காற்றும் அடிக்காது, அம்மிக்கல்லும் நகராது. ஜெயலலிதா ஆட்சியும் பறக்காது என்று கூறினார்.

அடுத்த செய்தி