ஆப்நகரம்

அறைக்குள் அரசியல் நடத்தும் ஆன்மீக ஞானி ரஜனி; அமைச்சர் கிண்டல்

நடிகர் ரஜினிகாந்த் அறைக்குள் அரசியல் நடத்தும் ஆன்மீக ஞானி என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 22 Mar 2018, 12:13 pm
நடிகர் ரஜினிகாந்த் அறைக்குள் அரசியல் நடத்தும் ஆன்மீக ஞானி என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
Samayam Tamil rajini jayakumar


நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகளிடம் வீடியோ கான்பரசிங் மூலம் பேசி வருகிறார். இந்நிலையில் ரஜினியின் இந்த வீடியோ கான்பரசிங் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

“உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என்று நம்புகிறோம். அதற்காக நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அழுத்தம் தந்த வண்ணம் உள்ளனர். மேலும், உச்சநீதிமன்றம் வழங்கிய 6 மாத கால அவகாசம் இன்னும் முடியவில்லை.

உரிய நேரத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பது தான் தமிழக அரசின் எண்ணம். ஆனால், உள்ளாட்சி அமைப்பு எல்லை வரையறை பணிகள் இன்னும் முடியவில்லை. இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்படும். அறைக்குள் அரசியல் நடத்தும் ஆன்மீக ஞானியாக நடிகர் ரஜினகாந்த் இருக்கிறார்.”

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி