ஆப்நகரம்

ஆகஸ்டில் சசிகலா ரிலீஸ்? அதிமுகவின் ‘மூவ்’ இதுதான்!

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

Samayam Tamil 10 Jul 2020, 2:21 pm
தமிழக அரசியல் களத்தில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக அதிகம் விவாதிக்கப்படுவது சசிகலாவின் விடுதலை குறித்து தான்.
Samayam Tamil vk sasikala release issue


சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது தண்டனைக் காலம் அடுத்த ஆண்டு நிறைவடையவுள்ளது. இருப்பினும் நன்னடத்தை காரணமாக அவர் ஆகஸ்ட் மாதம் விடுதலையாவார் என அவரது ஆதரவாளர்கள் கூறிவந்தனர்.

பரப்பன அக்ரஹாரா சிறை வட்டாரத்திலும், “உயர்மட்ட அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி நன்னடத்தை காரணமாகத் தண்டனையைக் குறைத்தால் வருடத்திற்கு 60 நாட்கள் என 4 வருடத்திற்கு 240 நாட்களைத் தண்டனை காலத்திலிருந்து விலக்கு பெறலாம். அப்படிச் செய்தால் சசிகலா ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது” என்கின்றனர்.

அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா பாதிப்பு!

ஒருவேளை சசிகலா முன்கூட்டியே விடுதலையாகும் பட்சத்தில் அதற்கு பாஜகவின் உதவி கட்டாயம் தேவை. அந்த உதவிக்கு சசிகலா என்ன செய்யப்போகிறார் எனும் கேள்வி எழுகிறது. அதிமுகவிலிருந்து பிரிந்துபோய் தினகரன் அமமுக என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். சசிகலா வருகைக்குப் பின் அதிமுகவுடன் அமமுக ஐக்கியமாகிவிடும் என்ற தகவலும் பரப்பப்பட்டு வருகிறது. அப்போது அதிமுக மேலும் வலுவாகிவிடும் என்றும் அடுத்த சட்ட மன்றத் தேர்தலிலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் பாஜக தரப்பில் கணக்கு போடப்படுவதாக கூறப்படுகிறது.

ஆனால் அமமுக தரப்பிலோ காலியாக உள்ள கட்சிப் பதவிகள் விரைவாக நிரப்பப்பட்டு வருகின்றன, கட்சியின் அடித்தளத்தை வலுவாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

அதிமுக தரப்பிலும் சசிகலா வருகைக்கு யாரும் கிரீன் சிக்னல் காட்டவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களாக விவாதிக்கபப்ட்டு வரும் இந்த தகவல் குறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன், "சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவை யார் வழி நடத்துவது என்பதை கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும். நான் சாதாரணமான மாவட்ட செயலாளர் என்றும் இதில் எந்த கருத்து கூறமுடியாது” என்று தெரிவித்தார்.

அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா எப்படி வந்தது?

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து பதிலளித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சசிகலா இல்லாமல் ஆட்சி நடத்துவது தான் அதிமுக அரசின் திட்டம்” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் குரலாக ஒலித்து வரும் ஜெயக்குமாரின் வார்த்தைகளை அதன் தலைமையின் கருத்தாக எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் ஆகஸ்ட்டுக்குப் பின் தமிழக அரசியலில் காட்சி மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி