ஆப்நகரம்

கொரோனா: களத்தில் இறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்!!

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, அமைச்சர் ஜெயக்குமார் தானே களத்தில் இறங்கி கிருமிநாசினி தெளித்த நிகழ்வு பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Samayam Tamil 27 Mar 2020, 9:16 pm
உலகையே அச்சுறுத்தலில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பிக்க, தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
Samayam Tamil minister jayakumar


இதன் காரணமாக, வடசென்னையில் அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் மூடப்பட்டு சென்னை முழுவதுமே ஆள் அரவம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து மீன்வளத் துறை அமைச்சரும், ராயபுரம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெயக்குமார், தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் இயந்திரத்தை கொண்டு கிருமிநாசினியை தெளித்தார்.

பொதுமக்கள் நன்கொடை அளிக்க முன் வரவேண்டும் - முதல்வர் அட்வைஸ்

பொதுவாக மக்கள் பிரதிநிதிகளான எம்.பி., எம்,எல்.ஏ.க்களை பொதுமக்கள் அவ்வளவு எளிதாக காண முடியாது. அப்படியிருக்க, கொரோனாவுக்கு எதிராக . அமைச்சரே களத்தில் இறங்கி பணியாற்றுவது அத்தொகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மீனவ குடியிருப்பான ராயபுரம் ஜி.எம். பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், ஜெட் லாரியில் 9 ஆயிரம் லிட்டர் தண்ணீரில் கிருமிநாசினி கலக்கப்பட்டு அனைத்து பகுதிகளிலும் தெளிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் ஊரடங்கை மீறியவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு தெரியுமா?

கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க கைகளை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், சுற்று வட்டார பகுதிகளிலும் கிருமிநாசினி தெளித்து நோய்களை அண்டவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ராயபுரம் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

அடுத்த செய்தி