தமிழ்ப் பேசினால் தமிழ் வளராது என்ற அறிய கண்டுபிடிப்பின் மூலம் தமிழுக்கு மிகப்பெரிய பெருமை சேர்த்தவராக ரஜினி இருக்கிறார் என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை வேலப்பன்சாவடியில் ஏசிஎஸ் கல்லூரியில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்த நடிகர் ரஜினி, மாணவர்களிடையே பேசினார். அப்போது தமிழகத்துக்கு இப்போது ஒரு தலைமை தேவை. ஒரு தலைவன் தேவை என்றும், அந்த இடத்தை நிரப்ப நான் வருகிறேன் என்றும் கூறினார். மேலும் எம்.ஜி.ஆரைப் போல தன்னால் சிறந்த ஆட்சியை மக்களுக்கு கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். சென்னையில் இன்று பத்திரியாக்கையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; ’நாங்கள் வீட்டில் தமிழில் பேச சொல்கிறோம். அம்மா அப்பா என அழைக்கச் சொல்கிறோம்.ஆனால் ரஜினிகாந்த் டாடி, மம்மி என சொல்லச் சொல்கிறார். தமிழ்ப் பேசினால் தமிழ் வளராது என்ற ரஜினியின் உரையை தமிழ் அறிஞர்கள், தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆங்கிலம் நமது இணைப்பு மொழியாக இருப்பதால் அதனை கற்றுக்கொள்ள வேண்டும். அதன் மூலம் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். தமிழ்ப் பேசினால் தமிழ் வளராது என்ற அறிய கண்டுபிடிப்பின் மூலம் தமிழுக்கு மிகப்பெரிய பெருமை சேர்த்தவராக ரஜினி இருக்கிறார்.
எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருகிறேன் எனக்கூறி அரசியலுக்கு வந்து கட்சி ஆரம்பித்த எத்தனை பேர் காணாமல் போயிருக்கிறார்கள். எவ்வளவுதான் உயர பறந்தாலும் குருவி குருவிதான். பருந்து பருந்துதான். அதிமுக உயரப் பறக்கும், பருந்து. ஊர்க் குருவிக்கெல்லாம் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. அரசியலுக்கு வருபவர்கள் எதாவது ஒரு குற்றச்சாட்டுகளைச் சொல்லத்தான் செய்வார்கள். இவ்வாறு ரஜினிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை வேலப்பன்சாவடியில் ஏசிஎஸ் கல்லூரியில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்த நடிகர் ரஜினி, மாணவர்களிடையே பேசினார். அப்போது தமிழகத்துக்கு இப்போது ஒரு தலைமை தேவை. ஒரு தலைவன் தேவை என்றும், அந்த இடத்தை நிரப்ப நான் வருகிறேன் என்றும் கூறினார். மேலும் எம்.ஜி.ஆரைப் போல தன்னால் சிறந்த ஆட்சியை மக்களுக்கு கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். சென்னையில் இன்று பத்திரியாக்கையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; ’நாங்கள் வீட்டில் தமிழில் பேச சொல்கிறோம். அம்மா அப்பா என அழைக்கச் சொல்கிறோம்.ஆனால் ரஜினிகாந்த் டாடி, மம்மி என சொல்லச் சொல்கிறார். தமிழ்ப் பேசினால் தமிழ் வளராது என்ற ரஜினியின் உரையை தமிழ் அறிஞர்கள், தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆங்கிலம் நமது இணைப்பு மொழியாக இருப்பதால் அதனை கற்றுக்கொள்ள வேண்டும். அதன் மூலம் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். தமிழ்ப் பேசினால் தமிழ் வளராது என்ற அறிய கண்டுபிடிப்பின் மூலம் தமிழுக்கு மிகப்பெரிய பெருமை சேர்த்தவராக ரஜினி இருக்கிறார்.
எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருகிறேன் எனக்கூறி அரசியலுக்கு வந்து கட்சி ஆரம்பித்த எத்தனை பேர் காணாமல் போயிருக்கிறார்கள். எவ்வளவுதான் உயர பறந்தாலும் குருவி குருவிதான். பருந்து பருந்துதான். அதிமுக உயரப் பறக்கும், பருந்து. ஊர்க் குருவிக்கெல்லாம் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. அரசியலுக்கு வருபவர்கள் எதாவது ஒரு குற்றச்சாட்டுகளைச் சொல்லத்தான் செய்வார்கள். இவ்வாறு ரஜினிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.