ஆப்நகரம்

டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை: ஜெயக்குமார்!

டி.டி.வி.தினகரன் மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 6 Oct 2018, 3:44 pm
டிடிவி தினகரன், சசிகலா குடும்பத்தினரை அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Samayam Tamil டிடிவி தினகரன் குடும்பத்தினரை அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை: ஜெயக்குமார்!
டிடிவி தினகரன் குடும்பத்தினரை அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை: ஜெயக்குமார்!


மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: டிடிவி தினகரன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்ததாக கூறியிருக்கிறார். அதற்கு துணை முதலமைச்சர் விளக்கம் அளித்து விட்டார். அதற்கு பிறகு அதுபற்றி நான் பேசுவது சரியாக இருக்காது.

சசிகலா, குடும்பத்தை சார்ந்தவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு இயக்கத்தையும் அரசையும் வழிநடத்த வேண்டும் என்பது தான் தமிழக மக்களின், ஒட்டுமொத்த உணர்வு.

எனவே டிடிவி தினகரன், சசிகலா குடும்பத்தினரை அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. அது நடக்கவும் நடக்காது. 2 சதவீத தொண்டர்கள் மட்டுமே தினகரன் பக்கம் உள்ளனர். அதுவும் அதிமுகவில் பதவி கிடைக்காதவர்களே தினகரன் பின் உள்ளனர்.

மேலும் ஆளுநர் குறிப்பிட்டதை போல துணைவேந்தர்கள் பணம் கொடுத்து பதவி பெற்றிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. யாரென்று சொன்னால், அதில் உண்மை இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அடுத்த செய்தி