ஆப்நகரம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜுக்கு தீவிர சிகிச்சை..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

Samayam Tamil 19 Jan 2021, 8:37 pm
தமிழகத்தில் பேரலையாக வீசிவந்த கொரோனா தற்போது படிப்படியாக குறைந்து மாநில எண்ணிக்கையில் 500 ஆகவும், சென்னையில் 200 க்கும் கீழே பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இருப்பினும், கொரோனா பெருந்தொற்று முழுவதுமாக குறையவில்லை.
Samayam Tamil file pic


பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜனவரி முதல் வாரத்தில் திருவாரூர் பகுதியில் பொங்கல் தொகுப்புகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் காமராஜுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 6 ஆம் தேதி அமைச்சருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு வார சிகிச்சைக்கு பின்னர் காமராஜ் இணை நோயால் அவதிப்பட்டார்.

சசிகலா விடுதலையாகும் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு!

அதனை தொடர்ந்து சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது. இதனால், அமைச்சர் காமராஜ் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி