ஆப்நகரம்

மக்களின் பசி தீர்ப்பதில் தமிழ் நாடுதான் நம்பர் ஒன்!

உணவுத் துறை அமைச்சர் காமராஜ் இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Samayam Tamil 28 May 2020, 1:01 pm
கொரோனா கால நெருக்கடி நிலையை சமாளிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளை பாராட்டுவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil minister kamaraj


உணவுத் துறை அமைச்சர் காமராஜ் இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

“கொரோனா காலத்தில் அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதாக மக்கள் பாராட்டுகின்றனர். 65 நாட்கள் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கலில் சரியாக செயல்பட்டுள்ளோம்” என்றார். “ஆனால் உணவுத்துறை சார்ந்த விஷயங்களில் சிலர் வதந்திகளை சிலர் பரப்பி வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் அரசியல் நாடகம் நடத்தி வருகிறார்” என்று அமைச்சர் காமராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா: தமிழ்நாடு தொடும் புது புது உச்சங்கள்!

“மத்திய தொகுப்பிலிருந்து 2 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை கிலோ 22 ரூபாய்க்கு வாங்கி மக்களுக்கு 2 மடங்கு அரிசியை இலவசமாக வழங்கியுள்ளார் முதல்வர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் மக்களுக்கு இலவசமாக உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பருப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகியவையும் இரு மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஜுன் மாதத்திற்கும் வழங்கப்படவுள்ளன. இந்த ஆண்டு உணவுத்துறைக்கு மானியமாக 6500 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா கால தடுப்பு நடவடிக்கைக்காக மட்டும் முதல்வர் 3,108.33 கோடி ரூபாய் உணவுத்துறைக்கு மானியமாக வழங்கியுள்ளார்.

கொரோனா: நேற்று இரவு மட்டும் சென்னையில் 5 பேர் பலி!

அம்மா உணவகங்களில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் உணவு வழங்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள 2.93 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகளுக்கு சென்றே உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன" என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். கொரோனா பொது முடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளபோதும் பட்டினியால் யாரும் அவதிப்படக்கூடாது என்ற நோக்கில் அரசு செயல்பட்டுவருவதாக அதிமுகவினர் கருத்து தெரிவிக்கின்றனர். உலக பட்டினி தினமான இன்று தமிழ்நாட்டில் பசி நோயால் யாரும் வாடக்கூடாது என அரசு செயல்படுவதாகவும் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி