ஆப்நகரம்

தமிழக கல்லூரிகள் திறப்பு: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

கல்லூரிகளைத் திறப்பது குறித்த முக்கிய அறிவிப்பை உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 10 Nov 2020, 9:34 am
பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
Samayam Tamil tn college open


அரசின் இந்த அறிவிப்புக்கு பெற்றோர்கள், கல்வியாளர்கள், எதிர்கட்சிகள் ஆகிய பல தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இதனால் தமிழக அரசு பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது.

அந்தவகையில் இன்று தமிழகம் முழுவதும் கருத்து கேட்பு கூட்டம் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது.

ஆட்சியை தக்கவைக்க எடப்பாடி போடும் மாஸ்டர் பிளான்!

இந்நிலையில் கல்லூரிகள் திறக்கப்படுவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்துப் பேசியுள்ள உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கல்லூரிகள் திறக்கப்படுவது குறித்து மாணவர்கள், பெற்றோர்களிடம் கருத்துகள் பெறப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

கல்லூரிகளைத் திறப்பதில் நிலவும் முக்கிய சிக்கல் என்னவெனில் பல கல்லூரிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நவம்பர் 16ஆம் தேதி கல்லூரிகள் திறக்கபடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திமுக ஜாதகம் ஐ பேக் கையில்: ஆபத்தை உணர்வாரா ஸ்டாலின்?

இந்நிலையில் உயர் கல்வித்துறை அதிகாரிகளுடன் நவம்பர் 12ஆம் தேதி (வியாழன்) ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும் அந்தக் கூட்டத்திற்குப் பிறகு கல்லூரிகளை நவம்பர் 16ஆம் தேதி திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி