ஆப்நகரம்

தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்: அமைச்சர் வைத்த வேண்டுகோள்!

அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

Samayam Tamil 8 Aug 2022, 7:10 am
தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Samayam Tamil l murugan bjp


தமிழக பாஜக இதர மொழி பிரிவின் மாநில நிர்வாகிகள், மாவட்டதலைவர்கள் அறிமுகக் கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது

கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “பிற மாநிலங்களில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு பலர் தமிழ்நாட்டுக்கு வந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடம் பாஜகவை கொண்டு செல்லும் பணியில் இதரமொழி பிரிவினர் ஈடுபடுவார்கள்.
இபிஎஸ் மாஸ்டர் பிளான்... ஓபிஆரின் அரசியல் எதிர்காலமே க்ளோஸ்?
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் வரும் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நாடு முழுவதும் அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதையொட்டி, பல்வேறு விழிப்புணர்வு பேரணிகள் நடந்துவருகின்றன. தமிழகத்திலும் அனைத்து வீடுகளிலும் 13 முதல்15ஆம் தேதி வரை தேசியக் கொடியைஏற்ற வேண்டும் என்று பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்.

அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவை தனித்து இயங்கும் அமைப்புகளாகும். அவர்கள், தங்கள் பணிகளைத்தான் செய்து கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் 76 டிஎஸ்பிக்கள் மாற்றம்..! -சைலேந்திரபாபு அதிரடி ..!
ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி தேசியக் கொடிகளை விநியோகித்து வருகின்றனர். தேசியக் கொடி பற்றி ஆர்எஸ்எஸ்ஸுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறினார்.

அடுத்த செய்தி