ஆப்நகரம்

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை: அலர்ட் கொடுத்த அமைச்சர்!

பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமே. அதிலிருந்து அரசு விலக்களிக்கவில்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 20 Apr 2022, 10:47 am
இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது. ஜூன் மாதம் இந்தியாவில் நான்காவது கொரோனா அலை பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. கொரோனா ஒமிக்ரான் வைரஸின் எக்ஸ் இ திரிபு காரணமாக சீனா, ஹாங்காங், பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
Samayam Tamil ma subramanian


இந்நிலையில் தமிழகத்தில் முகக்கவசம் அணிவதற்கு விலக்கு அளிக்கப்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
தனித்துவிடப்படுவது சசிகலாவா, தினகரனா? மகிழ்ச்சியில் இபிஎஸ்
அப்போது பேசிய அவர், "டெல்லி, ஹரியாணா, மகாராஷ்டிரா மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாகத் தகவல் வருகிறது. மக்கள் கொரோனாவிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள தொடர்ந்து பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்ற கெடுபிடியிலிருந்து மட்டுமே அரசு விலக்களித்துள்ளது. முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கொரோனா வழிகாட்டு நெறிமுறையிலிருந்து விலக்களிக்கவில்லை.
ஆளுநர் வாகனம் தாக்கப்பட்டதா? டிஜிபிக்கு சென்ற முழு ரிப்போர்ட்!
இதுவரை ஒரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தாதோர் தாமாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேவைப்பட்டால் மாவட்டம் தோறும் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்படும்" என்று கூறினார்.

பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என சமீபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி