ஆப்நகரம்

70 சதவீத தடுப்பூசி: இலைக்கை அடையப் போகும் தமிழ்நாடு!

தமிழ்நாட்டில் விரைவில் 70 சதவீதம் அளவுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 8 Oct 2021, 10:09 am
வருமுன் காப்போம் என்ற தமிழ்நாடு அரசின் கொள்கையின்படி சென்னை லிவர் பவுண்டேசன் கல்லீரல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
Samayam Tamil Ma Subramanian


சென்னை ஆழ்வேர்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் சென்னை லிவர் பவுண்டேசன் சார்பாக கல்லீரல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம் 5000 இலவச கல்லீரல் பரிசோதனை, மற்றும் கல்லீரல் ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட உள்ளன
எதிர் வீட்டுக்குள் நுழைந்த ஸ்டாலின்: ஒரு அடடே சம்பவம்!
நிகழ்வில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கல்லீரலை காக்க உங்களுடன் இணைகிறோம். நீங்கள் அரசுடன் இணையுங்கள். சென்னை லிவர் பவுண்டேசனை காப்பீட்டு திட்டத்தில் இணைக்க வேண்டும் என கோரியுள்ளனர். அதற்கான ஆணை இரண்டு மூன்று நாட்களில் வழங்கப்படும்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அண்டை மாநிலங்கள் செயல்படுத்த முன் வந்துள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 17 லட்சம் பேர் இதுவரை பயன்பெற்றுள்ளனர் 12, 13 தேதிகளில் சுமார் 50 இடங்களில் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கப்பட உள்ளது

பெரியளவில் ஆக்ஸிஜனை கையிருப்பில் வைத்துக்கொள்ள ஏதுவாக ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களை நிறுவுகிறோம், ஏற்கனவே 71 இடங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களை நிறுவியிருக்கிறோம்.
சபரிமலை பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்: கேரள முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் இதுவரை 5 கோடியே ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது முதல் தவணை 64% , இரண்டாவது தவணை 22% ஆக உள்ளது. 70 % ஆவது தடுப்பூசியை போட்டுக்கொண்டால்தான் எந்த அலையாக இருந்தாலும் தப்பிக்க முடியும் அந்த இலக்கை பத்து முதல் 15 நாட்களுக்குள் அடைவோம். தமிழ்நாட்டில் 50 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன” என்று கூறினார்.

அடுத்த செய்தி